இலங்கை ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி!!

306

இலத்திரனியல் ஊடகக்துறையில் புரட்சியை உருவாக்கி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI தொழில்நுட்பம்) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சி நேற்று வழங்கியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், பிரதான அறிவிப்பாளர்களான நிஷாதி பண்டாரநாயக்க மற்றும் சமிந்த குணரத்ன ஆகியோரின் பிரதியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய செய்தி ஒளிபரப்பு இந்த பிரதிகள் மூலம் நீண்ட நேரம் வழங்கப்பட்டது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்பத்தின் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க தேசிய தொலைக்காட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித செயல்பாடுகளை எளிதாக்க இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட மற்றும் முன்னணி தொழில்நுட்ப செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த வருடத்தின் சடங்குகளை பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பியது.

அத்துடன், நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான பார்வையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றது.

அதனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நேற்று செய்தி ஒளிபரப்புக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.