மூன்றரை வயதுச் சிறுமி பரிதாப மரணம்!!

635

பொலன்னறுவை – அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஹிருணி ரஷ்மிகா தேவி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டு முற்றத்தில் தனது மூத்த சகோதரியுடன் விளையாடிய பின்னர், இந்த சிறுமி நீராடுவதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

இதன்போது குளியலறையின் மேற்கூரையில் இருந்த நீர்த் தாங்கி தலையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.