வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த வெளிநாட்டவர்கள்!!

320

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் வருகை தந்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகள் சுவாமி உலாவரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்ற காட்சி பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.



திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழர் பாரம்பரிய உடையுடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் இருவர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் சுவாமி வலம் வரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்றுள்ளனர்.

இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுவாமியை தோலில் சுமந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.