தனக்கு தானே ஊசி செலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்.. சோக முடிவில் சிக்கிய கடிதம்!!

841

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அபிராமி, பி.டி.சாக்கோ நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், அபிராமி செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் அபிராமி உயிரிழந்து கிடந்துள்ளார்.



இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அபிராமியின் உடலை மீட்டனர். மேலும், அவரது அறையில் இருந்து ஊசி ஒன்றும், உயிரை மாய்த்துக் கொண்டதான கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அந்த கடிதத்தில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அவர் எழுதியிருந்துள்ளார். அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை, அபிராமி ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டு உயிரை விட்டுள்ளார் என கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை அவர் உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.