நியூசிலாந்தில்..
நியூசிலாந்தில் இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி 19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒக்லாந்தின் கரோட்டா கடற்கரையில் அலைகளில் சிக்கி அவர் காணாமல் போனார்.
தீவிரமாக தேடப்பட்ட வந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன இடத்தில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் சடலத்தை நியூசிலாந்து உயிர்காக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.