நாகர்கோவிலில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிதவைக்கலம்!!

633

நாகர்கோவிலில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட அடையாளம் தெரியாத மிதவைக்கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.



இன்று (01.01.2024) காலை கரையொதுங்கிய குறித்த மிதவைக்கலத்தை கடற்றொழிலாளர்கள் கரைக்கு இழுத்து வந்துள்ளனர். கரையொதுங்கிய கலம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரையிலும் மிதவை ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.