யாழில்..
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் கடந்த 23ம் திகதி (23.12.2023) திடீரென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சாயுடை, மாவிட்டபுரம் , தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் நேற்று (25.12) நடைபெற்றது.
மாணவியின் இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர்.
மாணவிக்கு கடந்த 17ஆம் திகதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு கடந்த 22ஆம் திகதி குறித்த யுவதி திடீரென மயக்கமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். யுவதி டெங்கு தொற்றினால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தபோதும், உடற்கூற்று பரிசோதனைகளின்படி அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை என்றும், இதனால் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாணவியின் மரணம் அவரது குடுபத்தவருக்கும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவியின் இறுதி சடங்கிஒல் பெருமளவானர்கள் கலந்துகொண்டு கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளமை துயரத்த்தைஏற்படுத்தியுள்ளது.