யாழில்..
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கலாசாலை வீதி, திருநெல்வேலியைச் சேர்ந்த பிறந்து 6 மாதங்களேயான பிருந்தாபன் அர்ச்சனா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் (22-12-2023) இரவு 10.00 மணியளவில் குழந்தை மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.