இலங்கையில்..
இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (22.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், குறித்த புகைப்படங்கள் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.
மேலும் இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 14 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.இந்தநிலையிலேயே வெளியான குறித்த புகைப்படங்கள் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவை என்று முகப்புத்தகத்தில் வேகமான பகிரப்பட்டு வந்தது.