பாராளுமன்ற விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் த.தே.கூ இன்று தீர்மானம்..!

605

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ப்ளோட், டி.யூ.எல்.எப், டேலோ, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்படி குறித்த விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.