வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி..!

685

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா கிளையினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28.6) உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலன் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறியின் போது அரச ஊழியாகள் அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், அனர்த்தத்தில் மக்களுக்கு பணியாற்றுவது, அனர்த்தத்தின் போது முதலுதவிகள் வழங்குதல் போன்ற பயிற்சிகள் அதன் போது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேலைத்திட்டங்கள் அதற்கு பொது மக்களினால் வழங்கப்பட வேண்டிய பங்கபளிப்புகள் என்பன தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப் பயிற்சி நெறிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என். சூரியராஜா, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உத்தியோகத்தர் கே. ராஜ்சங்கர் ஆகியோர் வழங்கியிருந்தனர்.



va1 va2 va3