விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) விசாரிக்க வேண்டும் என்று பிந்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
IPL தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார் சீனிவாசன்.
இவரை விசாரிக்க வேண்டும் என்று இதன் முன்னாள் ஆலோசகர் பிந்த்ரா ஐ.சி.சி. அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் விவரம் நேற்று வெளியானது.
38 ஆண்டுகளாக கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து வருகிறேன். எந்த தனிநபரை விடவும் கிரிக்கெட் தான் மேலானது என்று எப்போதும் நம்புபவன் நான். சமீபத்தில் நடந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணம் சீனிவாசன்.
பதவியை தனிப்பட்ட முறையில் ஆதாயம் தரும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்று ஐ.சி.சி விதி தெளிவாக கூறுகிறது. இவற்றை சீனிவாசன் மீறிவிட்டார் என்றும் நடத்தை நெறிமுறைகளை மீறிய இவரை ஐ.சி.சி விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.