ஐக்கிய தேசியக் கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியல் யாப்பின் நகல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுதந்திர மாவத்தையில் உள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்தில் வைத்து இன்று காலை இந்த அரசியல் யாப்பு நகல் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.