கொழும்பில் நாளை ஒரு வழி (one way) போக்குவரத்து ஒத்திகை..!

552

மருதானை பாலம் சந்தி தொடக்கம் டெக்னிகல் சந்திவரை, டெக்னிகல் சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம் சந்திவரை ஒரு வழி போக்குவரத்துக்கான ஒத்திகை நடவடிக்கைகள் நாளை 29ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 30ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இத்தினங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மாளிகாவத்தை வீதி மற்றும் ஆமர்வீதியில் இருந்து புறக்கோட்டை செல்லும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தையில் பஞ்சிகாவத்தை வீதிக்குள் நுழைந்து எல்பின்ஸ்டன் சினிமா அரங்குக்கு அருகில் தெற்காக திரும்பி டெக்னிகல் சந்தியில் வலது பக்கம் திரும்பி புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.

காமினி சுற்றுவட்டம் மற்றும் புஞ்சி பொரளை திசையில் இருந்து ஆமர் வீதி, மாளிகாவத்தை பகுதிக்கு வரும் வாகனங்கள் நேரடியாக டெக்னிகல் சந்திக்குச் சென்று தெற்காக திரும்பி சங்கராஜ மாவத்தை வீதியில் பயணித்து ஆமர் வீதி, மாளிகாவத்தையை அடைய முடியும்.



புறக்கோட்டை மற்றும் நீதிமன்ற திசையில் இருந்து காமினி சுற்றுவட்டம் அல்லது பொரளைக்கு வரும் வாகனங்கள் நேரடியாக சங்கராஜ சுற்றுவட்டம் வரை சென்று அங்கு பஞ்சிகாவத்தை வீதி ஊடாக மருதானை பாலம் சந்திக்கு வந்து புஞ்சி பொரளை அல்லது காமினி சுற்றுவட்டம் திசைக்குச் செல்ல முடியும்.

டெக்னிகல் சந்தியில் நீதிமன்ற வீதி மற்றும் பாலம் சந்தியை தாண்டி காமினி சுற்றுவட்டம் திசைக்கு வாகனங்களை செலுத்த முடியும்.

மாளிகாவத்தை வீதியில் இருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ சுற்றுவட்டத்தை தாண்டி பின் ஆமர்வீதி திசைக்குச் செல்ல முடியாது. அவ்வாறு வரும் வாகனங்கள் பெந்தாராம வீதி, பபாபுள்ளே வீதி ஊடாக கிரேன்பாஸ் மாவத்தை வழியாக ஆமர் வீதியை வந்தடைய முடியும்.

எனவே எதிர்வரும் இரு தினங்களில் மேற்கூறியவாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.