கணவனை படுக்கையிலேயே தீவைத்து எரித்த மனைவி : நெஞ்சை உலுக்கும் பயங்கரம்!!

1206

மானாமதுரை..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மானாமதுரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனுக்கு தீ வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்த தம்பதி லிங்கநாதன் (40) அங்கயற்கண்ணி (35). இவர்களுக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகும் நிலையில் ஏழு வயதில் மகள் உள்ளனர். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லிங்கனாதன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது உடலில் தீ பற்றி எரிவதை உணர்ந்து பதறி எழுந்துள்ளார்.

தீயை அணைத்துகொண்டே பக்கத்து வீட்டுக்கு சென்ற லிங்கநாதன், எனது மனைவி என்னை கொலை செய்ய உடலில் தீ வைத்துவிட்டாள் என்று கூறியுள்ளார். உடனே அவரை மீட்டவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மானாமதுரை போலீசார் லிங்கநாதன் மனைவி அங்கயற்கண்ணியை விசாரித்தனர். இதில், லிங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து வந்ததால் கணவனை கொலை செய்ய உடலில் தீ வைத்தது தெரிய வந்தது. அங்கயற்கண்ணியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். லிங்கநாதன் தொடர் சிகிச்சையில் உள்ளார்.