சேலையால் இறுக்கி கொலை செய்த பெண் : அதிர்ச்சி பின்னணி!!

860

நாமக்கல்லில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நாமக்கல்லில் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த கள்ளகாதலனை கொலை செய்த கள்ளக்காதலி.



நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திடுமல் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (50). இவர் இரண்டு ஆம்னி வேன் வைத்து வாடகை விட்டு வருகிறார். இந்நிலையில் தாளக்கரை பகுதியில் சுதா (45) என்பவர் வீட்டில் செல்வராஜ் மர்மமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செல்வராஜூன் மனைவி கலாமணி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து நல்லூர் காவல்துறையினர் அங்கு வந்து செல்வராஜூன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நல்லூர் போலீசார் சுதாவை கைது செய்து விசாரணை தொடங்கினர். விசாரணையில் செல்வராஜூக்கும், மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் சுதாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில், கள்ளக்காதலி சுதாவுக்கும் வேறு ஆண் நபர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதை அறிந்த செல்வராஜ் இதுகுறித்து சுதாவிடம் அந்த ஆண் நண்பரின் தொடர்பு வைத்திருப்பதை நிறுத்திக்கொள்ளுமாறும், அவனுடன் பழக கூடாது, பேசக்கூடாது என்று வாக்குவாதத்தில் செல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த சுதா செல்வராஜுக்கு அதிக மதுவை ஊத்தி கொடுத்து போதை மயக்கத்தில் இருந்த செல்வராஜை தான் கட்டியிருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் சுதா மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்