தமிழகத்தில்..
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர் பூபாலன். இவரது மனைவி ஷாலினி. கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பூபாலன், தனது மனைவி ஷாலினியின் முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் ஷாலினி மயங்கி விழுந்துள்ளார்.
அவர் இறந்துவிட்டதாக நினைந்த பூபாலன், பக்கத்து அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஷாலினி, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.