அக்காவுக்கும், தங்கைக்கும் ஒரே கணவன்… நள்ளிரவில் நடந்த விபரீதம்!!

1019

கரூர்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கரூர் அருகே 2வது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொன்று புதைத்த மாட்டு வண்டி தொழிலாளி. கொலை செய்து பிரேதத்தை மறைத்து வைத்துவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார்.



கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30).

அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனபால் முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளார். அங்கிருந்து இரண்டு நாட்கள் தலைமறைவான அவர் நேற்று வெள்ளியணை போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.

மூன்று நாட்கள் கழித்து இன்று மனைவியின் பிரேதம் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பிரேதத்தை கைப்பற்ற சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் தெற்கு மேட்டுபட்டி கிராமத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

தலைக்கேறிய மது போதையில் கணவர் மூலமாக தனக்கும் கொலை முயற்சி நடைபெற்றதாக முதல் மனைவி மேனகா (28) வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை நடந்ததாக கூறப்படும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள மொட்டை கிணற்றில் பிரேதம் இருப்பதாக கூறப்படுகிறது. மாலை நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் உள்ளனர்.