எரிவாயு தட்டுபாட்டிற்கு தீர்வு : லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

1629

எரிவாயு தட்டுபாட்டிற்கு தீர்வு..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதற்கமைய, நாளைய தினம் இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதுடன், இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.