வன்னி தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு..!

1053

வன்னி பிரதேசத்தில் தொண்டராசிரியர்களாக கடந்த பல வருடங்களாக பணியாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு வலயத்தில் 86 பேருக்கும், துணுக்காய் வலயத்தில் 78 பேருக்கும், மடு வலயத்தில் 43 பேருக்கும், வவுனியா வடக்கு வலயத்தில் 24 பேருக்குமாக 231 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதேவேளை கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கல்வி வலயங்ளை சேர்ந்த 283 தொண்டராசிரியர்களுக்கும்; கிளிநொச்சியில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மு.சந்திரகுமார், வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதியியன் இணைப்பாளர்களான ச.கனகரத்தினம், பிரேமரத்தின சுமதிபால, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வட மாகாண ஆளுனரின் இணைப்பாளர் முகைதீன், வட மாகாண கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



vavuniya Vavuniya1