சவுதியிலிருந்து 13,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை..!

451

சவுதி அரேபியாவில் விசா இல்லாது தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை விசா பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வீசா இல்லாது அந்நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தொடர்ந்து 13,000 இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் சவுதியிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.



இதேவேளை சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகளின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

சவுதி அரேபியாவில் ஆறு லட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர்.