பஸ் கட்டணம் உயருமா? திங்களன்று பேச்சுவார்த்தை..!

658

பஸ் கட்டண உயர்வு குறித்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை, மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பஸ் கட்டண உயர்வு குறித்து மட்டுமன்றி நேர்த்தியான போக்குவரத்து சேவை, ஒன்றிணைந்த கால அட்டவணை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு பேசப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து பேச சம்பந்தம் இல்லாத நபர்களை அழைத்துள்ளமைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.