காதல் தோல்வியால் இளைஞர் ரயிலில் தலைவைத்து தற்கொலை..!

479

கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் தலைவைத்து இன்று  முற்பகல் 11.25 அளவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாரவில பொலிஸ் பிரிவில் நாத்தன்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் அம்பகஹவாடிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

20 வயதுடைய தசுன் பிரியங்கர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட மனக்கவலையை அடுத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.