புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பிரதேச மின் பொரியிலாளர் ஆகியோர் இன்று பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
நேற்றையதினம் இரவு புறக்கோட்டை – போதிராஜமாவத்தை பகுதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்துக்கான காணரம் இதுவரை தெரியவரவில்லை. மேலும் சம்பவ இடத்துக்கு பாதுகாப்புக்காக உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.